கூழாங்கல் கதை
கணபதி என்பவர் பள்ளியில் படிப்பித்துக்கொண்டிருந்த தன்னுடைய மகனான வேலுவை பாதியிலேயே கூட்டிக்கொண்டு செல்கிறார். போகும் வழியில் சிலர் கும்பலாக சீட்டாடிக்கொண்டிருகின்றனர். அங்கு கணபதி தன் நண்பனிடம் கடனாக கொஞ்சம் பணத்தை வாங்கிக்கொண்டு செல்கிறான்.
Read Also: Margazhi Thingal Movie Review
ஒரு கடையில் மதுபானத்தை வாங்கி கொஞ்சம் குடித்துவிட்டு, மீதியை எடுத்துக்கொண்டு தன் மனைவி சாந்தியை அழைத்துவர மாமியார் வீட்டிற்கு செல்கிறார். அங்கு சென்று பார்த்தால் மனைவி சாந்தி, கணபதியை பார்க்க தங்களுடைய வீட்டிற்கு சென்றிருப்பார். பிறகு கணபதியும், வேலும் வரும் வழியில் என்னவெல்லாம் நடந்தது என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை அறிமுக இயக்குனர் PS. வினோத் மிக சிறப்பாகவும், எதார்தமாகவும் இயக்கியுள்ளார்.
இந்த கூழாங்கல் திரைப்படம், சர்வதேச அளவில் பல விருதுகளை வாங்கிக்குவித்த திரைப்படமாகும்.
படத்தில் சிறப்பானவை
➡கணபதி & வேலு கதாபாத்திரத்தின் நடிப்பு
➡யுவனின் இசை
➡ஒளிப்பதிவு
➡படம் எடுக்கப்பட்ட விதம்
➡எதார்த்த வசனங்கள்
படத்தில் கடுப்பானவை
➡கடுப்பாகும் அளவிற்கு எதுவும் இல்லை
Rating: ( 3.5/5 )