ஆதார் கதை
கதையின் நாயகன் கருணாஸ் கைக்குழந்தையுடன் போலீஸ் ஸ்டேஷன் செல்கிறார் காரணம் என்னவென்றல் அவரின் மனைவி மருத்துவமனையிலிருந்து காணவில்லை என்றும் அதுமட்டுமல்லாமல் அவரின் மனைவியுடன் இருந்தவரையும் காணவில்லை என்று புகார் கொடுக்கிறார், போலீஸ் அதிகாரிகள் விசாரித்து விட்டு கருணாசுக்கும் அவரின் மனைவிக்கும் வயது வித்யாசம் இருந்ததால் குழந்தை பிறந்தவுடன் அவர் ஓடி விட்டார் என்கின்றனர் போலீஸ் அதிகாரிகள் , கருணாஸ் அவரின் மனைவி அப்படி செய்திருக்க மாட்டார் என்று கதறி அழுகின்றார் போலீஸ் அவரை மிரட்டி அனுப்பி விடுகின்றனர், கருணாஸின் மனைவிக்கு என்ன ஆயிற்று என்பதும் கருணாஸ் அவரின் மனைவியை கண்டுபிடித்தாரா ? இல்லையா ? என்பதுதான் மீதி கதை
இதனை இயக்குனர் ராம்நாத் பழனிக்குமார் சற்று வித்தியாசமாகவும் எதார்தமாகவும் நமக்கு கொடுத்துள்ளார்
படத்தில் சிறப்பானவை
கதைக்களம்
ஒளிப்பதிவு
கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்த அனைவரின் நடிப்பு
பின்னணி இசை
படத்தில் கடுப்பானவை
சுவாரஸ்யமற்ற திரைக்கதை
Rating: ( 3/ 5 )
Also Read: Sinam Tamil Movie Review