தசரா தமிழ் திரைப்பட விமர்சனம்

தசரா கதை

வீரலப்பள்ளி என்று ஒரு ஊர் இருக்கிறது அந்த ஊரில் சில்க் பார் ஒன்று உள்ளது, அந்த பாரில் சில அரசியல் ரீதியான விஷயங்கள் நடக்கின்றன. கதையின் நாயகன் நானிக்கு இரண்டு பெஸ்ட் நண்பர்கள் இருக்கின்றனர், அதில் ஒருவர் தான் கதையின் நாயகி கீர்த்தி சுரேஷ் , நாயகன் நானிக்கு நாயகி கீர்த்தி மேல் காதல் ஏற்படுகிறது.

ஆனால் கீர்த்திக்கு நாயகனின் நண்பன் மீது காதல் ஏற்படுகிறது, பிறகு நாயகனின் நண்பனை வில்லன் கொன்றுவிடுகிறார், வில்லன் எதற்காக இவரை கொன்றார் என்பதும் , கீர்த்தியின் வாழ்க்கை அடுத்து என்ன ஆயிற்று என்பதும் , நாயகன் நானி நண்பனின் இழப்புக்காக பழி வாங்க துடிக்கிறார் அதன் பிறகு என்ன ஆயிற்று என்பதே படத்தின் மீதி கதை…

இந்த கதையினை அறிமுக இயக்குனர் ஸ்ரீகாந்த் மிக சிறப்பாக இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை
கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு
கீர்த்தி சுரேஷின் அட்டகாசமான நடிப்பு
சந்தோஷ் நாராயணின் பின்னணி இசை
சத்யன் சூரியனின் ஒளிப்பதிவு
அறிமுக இயக்குனர் ஸ்ரீகாந்த்தின் இயக்கம்

படத்தில் கடுப்பானவை
மெல்ல நகரும் இரண்டாம் பாதி

Rating : ( 3.5/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *