பொன்னியின் செல்வன் 2 கதை
பொன்னியின் செல்வன் பாகம் 1 முடித்த இடத்திலிருந்து தொடங்குகிறது பொன்னியின் செல்வன் பாகம் 2…
வல்லவராயன் வந்தியத்தேவனும் , அருள்மொழி மொழி வர்மனும் கடலில் மூழ்கி விடுகிறார்கள், இதனை அறிந்த சோழ தேச மக்கள் அனைவரும் துக்கத்திலிருக்கின்றனர், இது ஒரு புறம் இருக்க மறுபுறம் இவை அனைத்தையும் அறிந்த ஆதித்த கரிகாலன் நந்தினி மீது கடுங்கோபம் கொண்டு, நந்தினியை கொள்ள துடிக்கிறார்.
கடலில் மூழ்கிய அருள்மொழி வர்மன் ஊமை ராணி என்பவரால் காப்பாற்றப்படுகிறார், பார்ப்பதற்கு நந்தினி போல் இருக்கும் இந்த ஊமை ராணி யார் என்பதும் , நந்தினியை ஆதித்த கரிகாலன் கொன்றாரா ? அல்லது நந்தினி நினைத்தபடி ஆதித்த கரிகாலனை கொன்று சோழதேசத்தை அழித்தாரா ? இல்லையா ? என்பதுதான் படத்தின் மீதி கதை…
இந்த கதையை இயக்குனர் மணிரத்னம் அவருக்கே உண்டான பாணியில் மிக அற்புதமாகவும் ,பிரமாண்டமாகவும் இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
திரைக்கதை
உருவாக்கிய விதம்
கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு
AR. ரஹ்மான் பின்னணி இசை
ரவிவர்மன் ஒளிப்பதிவு
படத்தில் கடுப்பானவை
மெல்ல நகரும் கதை
Rating ( 4.5/5 )