ஐமா கதை
கதையின் நாயகி மரியா இந்த வாழ்க்கையே வெறுத்து போன அளவிற்கு மன உளைச்சலுடன் இருக்கிறார். அதற்கு காரணம் இவரை தந்தையாகவும் தாயாகவும் பார்த்துக்கொண்ட அண்ணன் தன் பிறந்த நாளில் இறந்ததால் இந்த வெறுப்பு. கதையின் நாயகன் ஆதாம் தன் அம்மாவின் உயிரை காப்பாற்றுவதற்கு, ஆபரேஷன் செய்வதற்காக பணம் தேவைப்படுகிறது. அந்த பணத்தை திரட்டுவதற்காக திண்டாடிக்கொண்டிருக்கிறான்
Read Also: Are You Ok Baby? Tamil Movie Review
கதையின் நாயகி தன் அண்ணனின் கல்லறையில் தனியாக இருக்கும் போது, ஒரு மர்ம கும்பல் இவரை கடத்தி விடுகின்றனர். நாயகி விழித்து பார்த்தால் ஒரு பாழடைந்த இடத்தில் இருக்கிறார், அதே போல் நாயகனும் கடத்தப்பட்டு வேறு ஒரு அறையில் அடைக்கப்பட்டிருப்பார். தப்பிக்கும் முயற்சியில் இருவரும் சந்திக்கின்றனர், அதன் பிறகு இவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பித்தார்களா? இல்லையா? என்பதும், இவர்களை இங்கு யார் அடைத்து வைத்தார்கள்? எதற்க்காக அடைத்து வைத்தார்கள் என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை இயக்குனர் ராகுல் R கிருஷ்ணா இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡சிறப்பான ஒளிப்பதிவு
➡பின்னணி இசை
➡அனைவரின் நடிப்பு
படத்தில் கடுப்பானவை
➡மேலும் மெழுகேற்றப்படாத கதைக்களம்
➡சுவாரஸ்யமற்ற திரைக்கதை
Rating: ( 2.5/5 )