செவ்வாய்கிழமை கதை
1986: ரவி & சைலஜா இருவரும் சிறுவயது நண்பர்களாக இருக்கின்றனர். சைலஜாவின் அம்மா இறந்த பிறகு, அப்பா இரண்டாவது திருமணம் செய்துகொள்கிறார். சைலஜா தன் சித்தியால் நாளுக்கு நாள் கொடுமைகளை அனுபவித்து வருகிறார். அப்போது தனக்கு ஆறுதலாக இருந்த ரவியும், அவரின் அப்பாவும் ஒரு விபத்தில் இறந்து விடுகிறார்கள்.
Read Also: Chaitra Tamil Movie Review
பத்து வருடங்களுக்கு பிறகு சைலஜா இருக்கிற கிராமத்தில் ஒவ்வொரு செய்வாய்கிழமையும் சுவற்றில் ஒருசில நபர்களின் பெயர் எழுதப்பட்டிருக்கும் அவர்கள் மர்மமான முறையில் இறந்துவிடுவார்கள். இது போன்ற சம்பவங்கள், தொடர்ந்து அடுத்தடுத்த செய்வாய்கிழமைகளில் நடந்துகொண்டு இருக்கிறது. இதனால் ஊரே பயந்து போய் இருக்கிறது. இதிலிருந்து தங்களை காப்பாற்றிக்கொள்ள ஊர் மக்கள் என்னென்ன செய்தார்கள் என்பதும், சிறுவயதில் கொடுமைகளை அனுபவித்த சைலஜாவிற்கு என்ன ஆயிற்று என்பதே ? படத்தின் மீதி கதை…
இந்த கதையினை இயக்குனர் அஜய் பூபதி மிகச்சிறப்பாக இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡பாயல் ராஜ்புட் நடிப்பு
➡கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு
➡அஜினேஷ் லோகநாத் பின்னணி இசை
➡ஒளிப்பதிவு
➡மற்ற அனைத்து தொழில் நுட்பங்கள்
➡எதிர்பாராத திருப்பங்கள்
படத்தில் கடுப்பானவை
➡மெல்ல நகரும் ஃப்ளாஷ்பேக் பகுதி
Rating: ( 3/5 )