கார்டியன் கதை
கதையின் நாயகி அபர்ணா ஒரு துர்தர்ஷ்டசாலியாக இருக்கிறார். இவர் எது நினைத்தாலும் நடக்காது, கிடைக்காது. ஒருநாள் இவர் வேலை செய்யும் இடத்தில் எதிர்பாராத விதமாக காலில் அடிபடுகிறது. அப்போது அவருக்கு ஒரு கல் கிடைக்கிறது, அந்த கல் பார்க்க மர்மமான கல்லாக தெரிகிறது.
Read Also: Nalla Perai Vaanga Vendum Pillaigale Movie Review
அந்த கல் கிடைத்த பிறகு இவர் நினைத்தெல்லாம் நடக்கிறது, நினைத்ததெல்லாம் கிடைக்கிறது. ஆனால் ஒருகட்டத்திற்கு மேல் எல்லாம் தவறாக நடக்க ஆரம்பிக்கிறது. இதனை உணர்ந்த அபர்ணா அந்த கல்லை உடைக்கிறார், உடைத்த பிறகு அபர்ணாவை சுற்றி பல அமானுஷியமான விஷயங்கள் நடக்கிறது. இந்த அமானுஷியத்திற்கெல்லாம் என்ன காரணம் என்பதும்? அதன்பிறகு அபர்ணாவிற்கு என்ன ஆயிற்று என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை குரு சரவணன் எழுத, இயக்குனர்கள் சபரி & குருசரவணன் இருவரும் இணைந்து இயக்கியுள்ளனர்.
படத்தில் சிறப்பானவை
➡ஹன்சிகாவின் நடிப்பு
➡சாம்.CS ன் பின்னணி இசை
➡ஒளிப்பதிவு
படத்தில் கடுப்பானவை
➡காலகாலமாக கண்ட கதைக்களம்
➡மேலும் மெருகேற்றப்படாத திரைக்கதை
Rating: ( 2.5/5 )