ஜோஷ்வா இமைபோல் காக்க கதை
கதையின் நாயகன் ஜோஷ்வா ஒரு காண்ட்ராக்ட் கில்லர். இவருக்கு ஒருவரை கொலை செய்யும் பொறுப்பை கொடுத்தால் அந்த நபர் உலகத்தில் எங்கிருந்தாலும் தேடி போய் அவரை கொள்ளக்கூடியவர். இவர் கதையின் நாயகி குந்தவையை பார்க்கிறார் அவர் மேல் காதல்வயப்படுகிறார். ஒருகட்டத்திற்கு மேல் தான் யார் என்பதை குந்தவையிடம் சொல்கிறார். இதனை கேட்டவுடன் குந்தவை, ஜோஷ்வா வை விட்டு சென்றுவிடுகிறார்.
Read Also: Satham Indri Mutham Tha Tamil Movie Review
தற்போது தான் செய்யும் காண்ட்ராக்ட் கில்லர் வேலையை விட முடிவெடுக்கிறார் ஜோஷ்வா. அப்போது ஜோஷ்வா-விற்கு ஏஜெண்டாக இருக்கக்கூடிய டிடி, அவரை பெரிய பெரிய VIP களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் வேலையை செய்யலாம் என சொல்கிறார், ஜோஷ்வா அந்த வேலையை ஏற்றுக்கொள்கிறார். அப்போது நியூயார்கில் இருக்கும் குந்தவைக்கு ஒரு பிரச்சனை வருகிறது. பிறகு ஜோஷ்வா, குந்தவைக்கு பாதுகாப்பு கொடுக்க செல்கிறார். அதன்பிறகு இவர்கள் காதல் மீண்டும் மலர்ந்ததா? இல்லையா? என்பதும் ஜோஷ்வா குந்தவையை பாதுகாத்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை இயக்குனர் கெளதம் மேனன் அவருக்கே உண்டான பாணியில் இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡வருணின் நடிப்பு
➡சண்டைக்காட்சிகள்
➡பாடல்கள் & பின்னணி இசை
➡ஒளிப்பதிவு
➡படத்தொகுப்பு
படத்தில் கடுப்பானவை
➡இரண்டாம்பாதி திரைக்கதை
Rating: ( 2.75/5 )