காதர்பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் தமிழ் திரைப்பட விமர்சனம்

காதர்பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் கதை

ராமநாதபுரம் மாவட்டம் நடுவக்குறிச்சியில் வசிக்கும் கதையின் நாயகி தமிழ் செல்விக்கு 2 மாமன்கள் இருக்கிறார்கள், அவர்களின் மகன்களில் யாருக்காவது தமிழ் செல்வியை திருமணம் செய்துவைத்து , அவரின் சொத்துக்களை அபகரிக்க நினைக்கின்றனர், ஆனால் தமிழ் செல்வி அதனை மறுத்துவிடுகிறார்.

Read Also : Veeran Movie Review

மதுரை ஜெயிலுக்கு காதர்பாட்ஷா என்ற முத்துராமலிங்கத்தை தேடி செல்கிறார் , ஆனால் அவர் அங்கு இல்லை இப்படியே சில போலீஸ் ஸ்டேஷனுக்கு அவரை தேடி கடைசியாக செங்கல்பட்டு ஜெயிலுக்கு தேடி செல்கிறார், தன்னை பற்றி ஒரு பெண் விசாரிப்பதை அறிந்த காதர்பாட்ஷா அந்த பெண்ணை தேடி செல்கிறார், அப்படி காதர்பாட்ஷா சென்ற பிறகு என்னென்ன பிரச்சனைகள் நடந்தது என்பதும் , தமிழ் செல்வி காதர்பாஷாவை தேடிவந்ததற்கான காரணமும், காதர்பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் என்ற பெயர் கதாநாயகனுக்கு எதனால் வந்தது என்பதே படத்தின் மீதி கதை…

இந்த கதையினை இயக்குனர் முத்தையா அவருக்கே உண்டான பாணியில் இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

அனைவரின் நடிப்பு ( குறிப்பாக ஆர்யா , சித்தி இத்தானி )
பின்னணி இசை
வேல்ராஜின் ஒளிப்பதிவு
அரசியல் பேசும் ஒருசில வசனங்கள்

படத்தில் கடுப்பானவை

காலகாலமாக கண்ட அதே கதைக்களம்
மெல்ல நகரும் முதல்பாதி

Rating : ( 3/5 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here