“மழை நின்றாலும் தூவானம் விடுவதில்லை” என்பார்கள் அதற்கு ஏற்றார் போல் Bigg Boss நிகழ்ச்சி முடிந்த போதும் கவின் லொஸ்லியா பிரச்னை தீ முடிந்தபாடில்லை !!
சமீபத்தில் நடிகர் கவின் ஒரு செலஃபீ போட்டோவை பதிவிட்டு அதில் “எடுக்காத டிரஸ்ல போட்டோ எடுத்து வச்சுகிட்டா எப்பயாவது உதவும்’ என்று குறிப்பிட்டுஇருந்தார். அவரை தொடர்ந்து லொஸ்லியாவும் கவின் பாணியில் புகைபடத்தை பதிவிட்டு அதில் ” வாழ்க்கை உங்களுக்கு ஏதாவது கற்பிக்க முயற்சிக்கிறது, எனவே உங்கள் தவறுகளை ஏற்றுக்கொண்டு உங்களை கண்ணாடியில் பாருங்கள்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிகழ்வு எதார்த்தமாக நடந்ததா?? அல்ல உள்நோக்கத்துடன் நடந்ததா என்று சாமானிய மனிதர்கள் சிந்திப்பதற்குள் ? திண்ணையில போறவனுக்கு திடுக்குனு வாழ்வு வந்தார் போல “மீடியாகள் கையில் எடுத்தது பஞ்சாயத்தை” தற்போது இருக்கும் சமூக வலைத்தளங்கள் எண்ணிக்கைக்கு லொஸ்லியா, கவின் விவகாரம் விஸ்வரூபம் எடுக்க துவங்கியது. இதனால் கவின் லொஸ்லியா ரசிகர்கள் நான்காம் உலகப்போருக்கு தயாராகினர் !!
இந்நிலையில் லொஸ்லியா காதிற்கு நடக்கும் செய்தி போக, லொஸ்லியா மௌனம் கலைத்தார். தற்போது அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்நிகழ்விற்கு பதில் அளிக்கும் விதமாக ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டு உள்ளார்.
அதில் ” Hi everyone , hope you are safe first please understand that this is my instagram , இதுல நான் போடுறது போட்டோஸ், ஸ்டேட்டஸ் அனைத்தும் என்னை பற்றிய விஷயங்கள் மட்டுமே !! “Only about me” எனக்கு பின்னாடி பேச புடிக்காது. அதனால் நீங்கள் பேச நினைத்தாள் இப்பொது நடப்பதை மட்டும் பேசுங்கள்” என்று பதிவிட்டு உள்ளார்.