ஓம் வெள்ளிமலையின் கதை
வெள்ளிமலையை சுற்றி உள்ள பகுதியில் ஒரு கிராமம் இருக்கிறது, அந்த கிராமத்தில் ஒரு வைத்தியரும் அவரின் மகளும் இருக்கின்றனர் , ஆனால் அந்த ஊர் மக்கள் யாரும் வைத்தியரிடம் வைத்தியம் பார்ப்பதில்லை இதற்கு காரணம் என்னவென்றால் , பல ஆண்டுகளுக்கு முன் வைத்தியரின் தம்பி சிறுவயதில் வைத்தியம் பார்த்த ஒருவர் இறந்துவிடுகிறார் , அதனால் அன்றுமுதல் அந்த ஊர் மக்கள் வைத்தியரிடம் வைத்தியம் பார்க்காமல் ஆங்கில மருத்துவத்தை நாட ஆரம்பித்தனர்.
தற்போது அந்த கிராமத்தில் ஒரு மர்மமான தொற்று நோய் பரவிக்கொண்டு இருக்கிறது, இந்த மர்மமான நோயிலிருந்து மக்களை காப்பாற்ற வைத்தியர் அதற்கான மருந்தை கண்டுபிடித்து மக்களை காப்பாற்றினாரா ? இல்லையா ? என்பதுதான் படத்தின் மீதி கதை…
இந்த கதையை இயக்குனர் ஓம் விஜய் இயக்கியதோடு சித்த மருத்துவத்தின் முக்கியத்துவத்தையும் சிறப்பையும் கூறியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
பின்னணி இசை
ஒளிப்பதிவு
கதைக்கரு
அனைவரின் நடிப்பு
படத்தில் கடுப்பானவை
திரைக்கதை
நம்மை கதையுடன் இணைக்காத கதைக்களம்
Rating : ( 2.75/5 )