ஒரு நொடி கதை
கதையின் ஆரம்பத்தில் சகுந்தலா என்பவரின் கணவர் காலையில் வீட்டை விட்டு சென்றவர், இரவு 10 மணி ஆகியும் வரவில்லை என்ற காரணத்தினால் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளிக்கிறார். ஆனால் அந்த புகாரை காவல் நிலையில் எடுக்கவில்லை. இவர் புகார் கொடுத்தது தியாகு என்கிற மிக பெரிய ரவுடி மேல் அதனால் தான் புகாரை காவல் நிலையத்தில் எடுக்கவில்லை.
Read Also: Rathnam Movie Review
அப்போது கதையின் நாயகன், சகுந்தலாவிடம் என்ன நடந்தது என கேட்க, தாங்கள் தங்கள் மகளின் திருமணத்திற்காக வாங்கிய கடனை அடைக்க தவறியதால், கடன் கொடுத்தவர் தியாகு என்ற ரவுடியயை அழைத்து வந்து வீட்டு பாத்திரத்தை வாங்கி விட்டார்கள், அதனை மீட்க சென்ற கணவர் இன்னும் வரவில்லை என்று நடந்ததை கூறுகிறார் சகுந்தலா. அதே சமயம் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பார்வதி என்ற பெண் மர்மமான இறந்துவிடுகிறார், கடைசியில் கதையின் நாயகன் சேகரை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதும் பார்வதியின் இறப்புக்கு யார் காரணம் என்பதையும் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை அறிமுக இயக்குனர் மணி வர்மன் சிறப்பாக இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡கதைக்கரு
➡அனைவரின் நடிப்பு
➡பின்னணி இசை
➡படத்தொகுப்பு
➡ஒளிப்பதிவு
படத்தில் கடுப்பானவை
➡கடுப்பாகும் அளவிற்கு எதுவும் இல்லை
ரேட்டிங்: (2.75 / 5)