ரத்னம் கதை
வேலூரில் MLA வாக இருக்கும் பண்ணீர் செல்வத்திடம் வேலை செய்துகொண்டிருக்கிறார் கதையின் நாயகன் ரத்னம். பண்ணீர் செல்வம், ரத்தனத்தை அதிகமாக நம்புகிறார் அதற்கான காரணம், ரத்னம் சிறுவயதில் பண்ணீர் செல்வதை சிலரிடமிருந்து காப்பாற்றியிருப்பார்.
கதையின் நாயகி மல்லிகாவுக்கு மருத்துவராக வேண்டும் என்ற கனவு இருக்கிறது. அதற்காக நீட் தேர்வு எழுத வேலூருக்கு வருகிறார். அப்போது சில ரவுடி கும்பல் மல்லிகாவை தாக்க வருகிறார்கள். அப்போது ரத்னம் அவரை காப்பாற்றுகிறார், மற்றும் நீட் தேர்வு எழுத உதவி செய்கிறார். அந்த ரவுடி கும்பல் மல்லிகாவை மீண்டும் தாக்க வருகின்றனர், மல்லிகாவை அந்த ரவுடி கும்பல் எதற்காக தாக்க வருகிறார்கள் என்பதும், அதற்கு நாயகன் என்னவெல்லாம் செய்கிறார் என்பதும், கடைசியில் மல்லிகா மருத்துவரானாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை இயக்குனர் ஹரி அவருக்கே உண்டான பாணியில் இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡விஷால் & ப்ரியாவின் நடிப்பு
➡மற்ற அனைவரின் நடிப்பு
➡DSP-யின் பின்னணி இசை
➡ஒளிப்பதிவு
➡படத்தொகுப்பு
➡சண்டை காட்சிகள்
படத்தில் கடுப்பானவை
➡அதிகப்படியான ரத்தக்காட்சிகள்
➡ஹரியின் முந்தைய படங்களின் சாயல்
ரேட்டிங்: (2.75 / 5)