போகுமிடம் வெகு தூரமில்லை கதை
கதையின் நாயகன் குமார் அமரர் ஊர்தி ஓட்டுபவராக இருக்கிறார். குமாரின் மனைவி, பிரசவத்திற்காக மருத்துவமனையில் இருக்கிறார் அதற்காக குமாருக்கு பணம் தேவைப்படுகிறது. அப்போது விபத்தில் இறந்த நாராயண பெருமாள் என்பவரை சென்னையிலிருந்து, திருநெல்வேலியில் உள்ள களக்காடு என்ற ஊருக்கு எடுத்துச்செல்ல வேண்டி உள்ளது, அப்போதுதான் இவருக்கு பணம் கிடைக்கும் என்பதனால் இறந்தவரை எடுத்துக்கொண்டு செல்கிறார் குமார்.
Read Also: Kottukkaali Tamil Movie Review
இறந்துபோன நாராயண பெருமாளுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள், அதில் ஒருவர் மனைவிக்கு பிறந்தவர், மற்றொருவர் வேறொருவருக்கு பிறந்தவர் இவர்களில் யார் நாராயண பெருமாளுக்கு கொல்லி வைப்பது என்ற சண்டை ஒருபக்கம் செல்கிறது. கடைசியில் விமல், நாராயண மூர்த்தியின் உடலை பத்திரமாக எடுத்துவந்தாரா? இல்லையா? என்பதும் நாராயண மூர்த்திக்கு யார் கொல்லி வைத்தது என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை அறிமுக இயக்குனர் மைக்கேல் K ராஜா சிறப்பாக இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡விமல் & கருணாஸ் நடிப்பு
➡மற்ற அனைவரின் நடிப்பு
➡கதைக்கரு
➡பிண்ணனி இசை
➡ஒளிப்பதிவு
படத்தில் கடுப்பானவை
➡மெல்ல நகரும் இரண்டாம் பாதி கதைக்களம்
ரேட்டிங்: (3 / 5)