அலங்கு கதை
கதையின் நாயகன் வீரா கேரளா எல்லைப்பகுதிக்கு அருகில் உள்ள மலைப்பகுதியில் தன் குடும்பத்துடன் சந்தோசமாக வாழ்ந்து வருகிறான். அப்போது வீரவிடம் ஒரு மூட்டையை கொடுத்து புதைக்க சொல்கிறார்கள். புதைப்பதற்கு முன் திறந்து பார்த்தல் அதில் நாய் குட்டி ஒன்று உயிரோடு இருக்கிறது, அதனை தன் வீட்டிற்கு எடுத்துச்சென்று வளர்கிறான்.
Read Also: Rajakili Tamil Movie Review
கடன் பிரச்சனை காரணமாக, வீரா ஒப்பந்தத்தின் அடிப்படையில் கேரளவில் அகஸ்டின் என்பவரிடம் வேலைக்கு செல்கிறான். அங்கு பலவருடங்கள் கழித்து தவமாய் தவமிருந்து பெற்ற பெண் பிள்ளையை நாய் ஒன்று கடித்துவிட. அகஸ்டின் அந்த சுற்றுவட்டாரத்தில் உள்ள நாய்களை கொல்லசொல்கிறார். நாயகன் வீரா தன் நாயை காப்பாற்ற போராடுகிறான். இதற்கடுத்து என்ன ஆயிற்று என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை இயக்குனர் SP சக்திவேல் இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡அனைவரின் நடிப்பு
➡பிண்ணனி இசை
➡படத்தொகுப்பு
படத்தில் கடுப்பானவை
➡மேலும் மெருகேற்றப்படாத திரைக்கதை
➡ஒளிப்பதிவு
ரேட்டிங்: ( 2 .5 / 5 )