S/O காலிங்கராயன் கதை
தமிழ்நாட்டிற்கும் கேரளாவிற்கும் இடையே நடக்கக்கூடிய கதைக்களம் தான் இந்த S/O காலிங்கராயன்.
காலிங்கராயன் ஊரில் பெரியவர், இவர் மக்களுக்கு பல நல்ல விஷயங்களை செய்கிறார், அப்படி மேற்கு தொடர்ச்சி மலையில் வசிக்கும் பழங்குடியினர் தண்ணீருக்காக கஷ்டப்படுவதை பார்த்து, அவர்களுக்காக தன் நிலத்தை கொடுக்கிறார், இது பிடிக்காத சிலர் காலிங்கராயனை கொன்றுவிடுகிறார்கள்.
Read Also: EMI Tamil Movie Review
20 வருடங்களுக்கு பிறகு, காலிங்கராயனின் மகனான சேதுவை மர்மமான நபர்கள் கொல்ல திட்டமிடுகிறார்கள். அதில் தலையில் அடிபட்டு சேது அனைத்தையும் மறந்துவிடுகிறார். இதுமட்டுமல்லாமல் பல பெண்கள் கற்பழிக்கப்பட்டு, காட்டில் இறந்து கிடக்கிறார்கள், இதனையெல்லாம் விசாரிக்க வந்த மாதீஸ்வரன், இதையெல்லாம் கண்டுபிடித்தாரா? இல்லையா? மற்றும் சேதுவுக்கு பழையது எல்லாம் நினைவுக்கு வந்ததா? இல்லையா? என்பதும் அவர் அப்பாவின் நிலம் பழங்குடியினருக்கு சென்றதா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை இயக்குனர் பாரதி மோகன் இயக்கியுள்ளார்.