ராணுவத்தில் பணிபுரியும் கதையின் நாயகன் வெற்றிச்செல்வன் ( ஆர்யா ) தனது நண்பர்களுடன் அவருக்கு கொடுக்க பட்ட வேலையை செய்வதற்காக செக்டார் 42 என்கிற இடத்திற்கு செல்கிறான் ஆனால் அங்கு எதிர்பாராத விதமாக அவரின் நபர்களுள் ஒருவர் இறந்து விடுகிறார், பிறகு சைன்டிஸ்ட் ஆக சிம்ரன் வருகிறார் சிம்ரன் இவர்களுக்கு செக்டார் 42 வில் மனிதர்கள் யாரும் போக முடியாத காரணத்தை விளக்குகிறார் பிறகு சிம்ரனும் இவர்களுடன் இணைந்து செக்டார் 42 என்ற இடத்திற்கு அனைவரும் செல்கிறார்கள் அங்கு இருக்கும் அந்த ஏலியன்களை இவர்கள் அழித்தார்களா? இல்லையா ? என்பதும் வெற்றிச்செல்வன் அவருடைய பகையை தீர்த்து நண்பர்களுடன் திரும்பி வந்தாரா ? இல்லையா ? என்பதுதான் மீதி கதை…
இதனை இயக்குனர் சக்தி சவுந்தர் ராஜன் தனது முந்தைய படங்கள் போலவே சற்று சுவாரசியமாக கூறியுள்ளார்
படத்தில் சிறப்பினவை
கதைக்களம்
இயக்கம்
கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்த அனைவரின் நடிப்பு
பின்னணி இசை
படத்தில் கடுப்பானவை
ஏலியன் CG
சுவாரஸ்யமற்ற திரைக்கதை
Rating: ( 3/5 )