தேவரா கதை
1996 ல் போலீஸ் அதிகாரி ஒருவர், ஒருவரை தேடி வரும்போது கடலுக்கடியில் சிலர் இறந்து கிடப்பதை பார்க்கிறார். அப்போது அங்கிருந்த சிங்கப்பாவிடம் அதனை பற்றி கேட்க, சிங்கப்பா தேவராவை பற்றி சொல்ல ஆரம்பிக்கிறார். கடலில் கப்பலில் வரும் சில சட்டவிரோத பொருட்களை எடுத்துக்கொடுத்தால் அதிக பணம் கிடைக்கும் என்பதற்காக மலையில் உள்ள 4 கிராம மக்களும் இந்த வேலையை செய்கிறார்கள்.
Read Also: Dopamine @2.22 Tamil Movie Review
ஒரு கட்டத்திற்கு மேல் கதையின் நாயகன் தேவராவிற்கு தாங்கள் செய்வது தவறு என தெரிந்து இவையெல்லாம் விட்டுவிட நினைக்கிறார். ஆனால் மற்ற ஊர் மக்கள் இதற்கு ஒத்துழைக்கவில்லை. ஒரு கட்டத்திற்கு மேல் அனைவரும் சேர்ந்து தேவராவை கொல்ல நினைக்கிறார்கள். இதற்கடுத்து என்ன ஆயிற்று என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை இயக்குனர் கொரட்டால சிவா இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡Jr NTR நடிப்பு
➡மற்ற அனைவரின் நடிப்பு
➡பாடல்கள் & பின்னணி இசை
➡ஒளிப்பதிவு
➡VFX காட்சிகள்
➡சண்டைக்காட்சிகள்
படத்தில் கடுப்பானவை
➡மெல்ல நகரும் கதைக்களம்
➡படத்தின் நீளம்
ரேட்டிங்: (3 / 5)