சப்தம் கதை
மூணாரில் உள்ள HOLY ANGEL கல்லூரியில் மருத்துவம் படிக்கும் இரண்டு மாணவர்கள், அடுத்தடுத்து மர்மமான முறையில் இறக்கிறார்கள். அதனால் அந்த கல்லூரியை பற்றி பத்திரிக்கைகளில் சில விஷயங்கள் எழுதுகிறார்கள். இதனால் மனமுடைந்த கல்லூரி மேலாளர், மற்ற ஆசிரியர்களிடம் பேசி ஒரு முடிவுக்கு வருகிறார்.
Read Also: Suzhal – Season 2 Web Series Review
HOLY ANGEL கல்லூரியில் பேய் ஏதாவது இருக்கிறதா? என அறிய ஒரு ஆய்வாளரை அழைத்துவருகிறார்கள். அங்கு வந்த கதையின் நாயகன் ரூபன், அங்கு பேய் உள்ளதா? இல்லையா? என தனது கருவிகளின் மூலம் ஆராய்கிறார். இதற்கடுத்து என்ன ஆனது என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை இயக்குனர் அறிவழகன் சப்தத்தை வைத்து சிறப்பாக இயக்கியுள்ளார்.
ஆதியும், அறிவழகனும் 16 வருடங்களுக்கு பிறகு இந்த சப்தத்தில் இணைந்துள்ளார்கள்.
படத்தில் சிறப்பானவை
➡ஆதியின் சிறப்பான நடிப்பு
➡மற்ற அனைவரின் நடிப்பு
➡சிறந்த ஒலி வடிவமைப்பு
➡தமனின் இசை
➡ஒளிப்பதிவு
➡படத்தொகுப்பு
படத்தில் கடுப்பானவை
➡மேலும் மெருகேற்றப்படாத இரண்டாம்பாதி திரைக்கதை
ரேட்டிங்: ( 3 / 5 )