மஹாவீரயார் தமிழ் திரைப்பட விமர்சனம்

மஹாவீரயார் கதை
ராஜா ஒருவருக்கு விக்கல் வந்துவிடுகிறது, அந்த விக்கல் நிற்காமல் அவருக்கு சிக்கலாய் இருக்கிறது இதனால் ராஜா தனது மந்திரியிடம் இந்த நாட்டில் உள்ள ஒரு அழகான பெண்ணை அழைத்து வா என்கிறார் ,மந்திரி ராஜாவிடம் உங்களுக்கு தான் ஏற்க்கனவே நிறைய மனைவிகள் இருக்கிறார்களே என ராஜாவிடம் சொல்கிரார், ராஜாவோ அழைத்து வா என்கிறார்…
இது ஒருபுறம் இருக்க மறுபுறம் நிவின் பாலி சாமியாராக ஒரு கோவில் அருகில் உள்ள மரத்தடியில் இருக்கிறார் அவர் அருகில் இருக்கிற அந்த கோவிலில் உள்ள சிலை காணாமல் போகிறது அப்படி காணாமல் போன சிலை இவரது அருகில் இருக்கிறது, அதனால் அவர்தான் அந்த சிலையை திருடினார் என போலீஸ் கைது செய்கின்றனர் அந்த ராஜாவின் விக்கலுக்கும் இந்த சிலை இவர் அருகில் வந்ததுக்கும் என்ன சம்மந்தம் என்பதுதான் மீதி கதை இதனை மிக சுவாரசியமாக கூறியுள்ளனர்

Read Also: Nadhi Tamil Movie Review

படத்தில் சிறப்பானவை
கதைக்களம்
க்ளைமேக்ஸ்
சிறந்த நடிகர் தேர்வு
பின்னணி இசை

படத்தில் கடுப்பானவை
திரைக்கதை அமைப்பு
நீளமாக இருக்கும் நீதிமன்ற காட்சி

Rating: (3.5/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *