பொன்னியின் செல்வன் கதை
பல ஆண்டுகள் பல பேரின் கனவான பொன்னியின் செல்வன் கதை கடைசியில் இயக்குனர் மணிரத்தினத்தினால் இன்று நிறைவேறி உள்ளது…
கதையின் நாயகன் வந்தியத்தேவன் ( கார்த்தி ) ஆதித்த கரிகாலனுக்கு ( விக்ரம் ) நண்பராக இருக்கிறான் அப்போது ஆதித்த கரிகாலன் வந்தியத்தேவனிடம் இரண்டு ஓலைகளை கொடுத்து ஒன்றை தனது தந்தை சுந்தரசோழருக்கும் மற்றொன்றை தங்கை குந்தைவையிடம் கொடுக்க சொல்லி அனுப்புகிறார் அதுமட்டுமல்லாமல் கடம்பூர் சம்புவராய மாளிகையில் தனது தந்தைக்கு எதிராக சதி நடப்பதாக தெரிந்து கொண்டார் அதனையும் சேர்த்து விசாரிக்க சொல்கிறார் ஆதித்த கரிகாலன்,
அந்த வேலையை செய்ய பயணிக்கும் போது சோழ சாம்ராஜ்யத்திற்கு பாண்டியர்களால் ஆபத்து வருவதை அறிகிறான் வந்தியத்தேவன் , இந்த இரண்டு தகவலை கொண்டு சேர்க்க வேண்டிய இடத்திற்கு கொண்டு சென்றாரா ? இல்லையா ? என்பதும் இதற்கிடையில் காதல் மற்றும் இவருக்கு ஏற்படும் பிரச்னைகளையும் சமாளித்தாரா ? இல்லையா ? என்பதுதான் மீதி கதை…
இதனை இயக்குனர் மணிரத்னம் அவருக்கே உண்டான பாணியில் தனித்துவமாகவும் , தத்ரூபமாகவும் இந்த பிரமாண்ட படைப்பை நமக்கு கொடுத்துள்ளார்
படத்தில் சிறப்பானவை
கதைக்களம்
திரைக்கதை
வசனம்
கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்த அனைவரின் நடிப்பு
பாடல்கள் மற்றும் பின்னனி இசை
ஒளிப்பதிவு
படத்தில் கடுப்பானவை
ஒன்றுமே இல்லை
Rating: ( 4.5 / 5)
https://youtu.be/e2tudlPR5cs