Thamizpadam Admin

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே தமிழ் திரைப்பட விமர்சனம்

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே கதை கதையின் நாயகன் ரவி எந்த வேலைக்கும் போகாமல் நபர்களுடன் சுற்றிக்கொண்டு, பெண்களுடன் தியேட்டர் செல்வது, வெளியில் சுற்றுவது என ஜாலியாக இருக்கிறார். சமூக வலைத்தளத்தில் பேசி ஒரு அரசி என்ற பெண்ணின் நம்பரை வாங்குகிறார். மற்றும் அரசியின் பிறந்தநாளுக்கு பரிசுகொடுப்பதர்க்காக நண்பனை அழைத்துக்கொண்டு மதுரையிலிருந்து மாயவரம் செல்கிறார். Read Also: J.Baby Movie Review மாயவரம் சென்றதும் அரசிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கிறார். மற்றும் அரசியின் வீட்டிற்கு சென்று…

Read More

J.பேபி தமிழ் திரைப்பட விமர்சனம்

J.பேபி கதை கதையின் ஆரம்பத்தில் செந்தில் (மாறன்), சங்கர் (அட்டகத்தி தினேஷ்) இருவருக்கும் காவல்நிலையத்திலிருந்து போன் வருகிறது. பிறகு இருவரும் காவல்நிலையம் செல்கின்றனர். அங்கு சென்ற பிறகுதான் இவர்களின் அம்மா J.பேபி, சென்னையிலிருந்து கொல்கத்தாவிற்கு ரயில் ஏறி சென்றிருப்பது தெரியவருகிறது. காவல் அதிகாரி இவர்கள் இருவரையும் கண்டித்து, பிறகு கொல்கத்தாவிற்கு சென்று அம்மாவை கண்டுபிடித்து அழைத்துவர சொல்கிறார். அண்ணன் தம்பி இருவரும் குடும்ப பிரச்சனையால் 3 வருடம் பேசாமல் இருக்கின்றனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து J….

Read More

‘காதலே காதலே’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!

பலதரப்பட்ட பார்வையாளர்களுக்கு ரசனையான பொழுதுபோக்கு படத்தை உருவாக்குவதில் பெயர் பெற்ற ஸ்ரீவாரி ஃபில்ம் தயாரிப்பாளர் பி.ரங்கநாதன், மஹத் ராகவேந்திரா மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘காதலே காதலே’ என்ற தனது அடுத்தப் படம் மூலம் ரசிகர்களைக் கவர உள்ளார். ஆர். பிரேம்நாத் இயக்கியுள்ள இந்தப் படம் சரியாகத் திட்டமிட்டு, படக்குழு அதை செயல்படுத்தி வெற்றிகரமாக படப்பிடிப்பை முடித்துள்ளது. தயாரிப்பாளர் பி. ரங்கநாதன் இது குறித்து மகிழ்வுடன் பகிர்ந்திருப்பதாவது, “ஒரு தயாரிப்பாளரின் வெற்றி என்பது…

Read More

‘குளோபல் ஸ்டார்’ ராம்சரணுடன் இணைந்த பாலிவுட் நடிகை ஜான்வி கபூர்!

‘குளோபல் ஸ்டார்’ ராம்சரண் அடுத்ததாக ‘உப்பென்னா’ புகழ் இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் பான் இந்திய திரைப்படமாக உருவாகும் #RC16 படத்தில் நடிக்கிறார். முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் பெருமையுடன் வழங்கும் இந்த திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாறு தயாரிப்பாளராக களம் இறங்குகிறார். அவருடைய விருத்தி சினிமாஸ் எனும் பட நிறுவனம் சார்பில் பிரம்மாண்டமான பொருட்செலவில் இப்படம் தயாராகிறது. இந்த திரைப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஜான்வி…

Read More

‘ஹன்சிகா’ நடிப்பில் மார்ச்-8-ஆம் தேதி மிரட்டலாக வெளியாகும் ‘ கார்டியன்’

தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான ஹன்சிகா மோத்வானி சமீபத்தில் நடித்துள்ள ‘கார்டியன்’ திரைப்படத்தின் மிரட்டலான டீஸர் கடந்த அக்டோபர் மாதம் வெளியாகி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த டீஸரில் ஹன்சிகா இரட்டை வேடத்தில் வருவது மாதிரியான காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமரச் செய்யும் பயமுறுத்தக்கூடிய காட்சிகளுடன் விறுவிறுப்பான திரைக்கதை அமைப்புடன் கூடிய காட்சிகளும் அமைந்துள்ளன. இத்திரைப்படத்தில் ஹன்சிகா மோத்வானியுடன் சுரேஷ் மேனன்,ஸ்ரீமன், அபிஷேக் வினோத்,ஸ்ரீராம் பார்த்தசாரதி, ‘மொட்டை’ராஜேந்திரன்,பிரதீப் ராயன்,’டைகர் கார்டன்’ தங்கதுரை…

Read More

பா.இரஞ்சித் என் சிஷ்யன் என்பதில் பெருமைப்படுகிறேன் – இயக்குனர் வெங்கட் பிரபு

ஊர்வசி முதன்மை பாத்திரத்தில் நடிக்க, தினேஷ் மாறன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் வரும் மார்ச் 8-ம் தேதி உலக மகளிர் தினத்தில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. படத்தை ‘சக்தி ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனம் வெளியிடுகிறது. இந்த நிலையில் படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. சிறப்பு விருந்தினராக இயக்குநர் வெங்கட் பிரபு கலந்து கொண்டார். அவருடன் படத்தின் கதைநாயகி ஊர்வசி, இயக்குநர் பா. இரஞ்சித், இயக்குநர் சுரேஷ்…

Read More

சமுத்திரக்கனி, யோகிபாபு நடிப்பில் ’யாவரும் வல்லவரே’ படம் மார்ச் 15 அன்று வெளியாகிறது!

அன்பு நிஜ வாழ்வில் மட்டுமல்ல, சினிமாவிலும் தோற்றதில்லை. அப்படியான அன்பை மையமாகக் கொண்டு ஹைப்பர் லிங்க் கதையாக உருவாகி இருக்கும் திரைப்படம் தான் ‘யாவரும் வல்லவரே’. சமுத்திரக்கனி, யோகிபாபு உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் இந்தப் படத்தை ராஜேந்திர சக்ரவர்த்தி இயக்கியுள்ளார். படம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டதாவது, “இந்தப் படம் திருச்சி, தொழுதூர், பெரம்பலூர், திட்டக்குடி, உளுந்தூர் பேட்டை, சென்னை, பெரியபாளையம், வடமதுரை, திருவேற்காடு ஆகிய இடங்களில் 35 நாட்கள் படமாக்கப்பட்டுள்ளது. இந்தக் கதை ஹைப்பர் லிங்க்…

Read More

போர் தமிழ் திரைப்பட விமர்சனம்

போர் கதை பாண்டிச்சேரியில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பிரபு மருத்துவ சம்மந்தமான படிப்பை படிக்கிறார். பல்கலைக்கழகத்தில் பிரபு சூப்பர் சீனியர் என்பதால், பல்கலைக்கழகத்தை ஆள்கிறார், இவர் நண்பர்கள், காதலி என மிக சந்தோஷமாக இருக்கிறார். Read Also: Athomugam Tamil Movie Review பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு மாணவனாக சேரும் யுவராஜ். சீனியர்களுடன் சண்டையிடுகிறார், அப்போது நண்பர்களுக்காக பிரபு வருகிறார். பிரபு, யுவராஜ் இருவருக்கும் சிறுவயது முன்பகை இருக்கிறது. அதன் காரணமாக யுவராஜ், பிரபுவிடம் உன் நண்பர்கள், காதலி…

Read More

ஜோஷ்வா இமைபோல் காக்க தமிழ் திரைப்பட விமர்சனம்

ஜோஷ்வா இமைபோல் காக்க கதை கதையின் நாயகன் ஜோஷ்வா ஒரு காண்ட்ராக்ட் கில்லர். இவருக்கு ஒருவரை கொலை செய்யும் பொறுப்பை கொடுத்தால் அந்த நபர் உலகத்தில் எங்கிருந்தாலும் தேடி போய் அவரை கொள்ளக்கூடியவர். இவர் கதையின் நாயகி குந்தவையை பார்க்கிறார் அவர் மேல் காதல்வயப்படுகிறார். ஒருகட்டத்திற்கு மேல் தான் யார் என்பதை குந்தவையிடம் சொல்கிறார். இதனை கேட்டவுடன் குந்தவை, ஜோஷ்வா வை விட்டு சென்றுவிடுகிறார். Read Also: Satham Indri Mutham Tha Tamil Movie Review…

Read More

அதர்வா முரளி-அதிதி ஷங்கர் நடிக்கும் படத்தின் அப்டேட் வெளியானது

ஸ்ரீ வாரி பிலிம் பி. ரங்கநாதன் திரைத்துறையில் அனுபவமிக்க திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தராக வலம் வருகிறார். ரசிகர்களுக்குப் பிடித்த வகையிலான எண்டர்டெயின்மெண்ட் படங்களை உருவாக்குவதற்கு பெயர் பெற்ற இவர் இப்போது இயக்குநர் எம். ராஜேஷ் இயக்கத்தில் நடிகர் அதர்வா முரளி மற்றும் அதிதி ஷங்கர் ஆகியோருடன் முதல் முறையாக இணையும் புதிய படத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறார். நியூ ஏஜ் எண்டர்டெயினராக இந்தப் படம் உருவாகிறது. தற்காலிகமாக இந்தப் படத்திற்கு ‘புரொடக்ஷன் நம்பர் 5’ என்று…

Read More