எறும்பு தமிழ் திரைப்பட விமர்சனம்

எறும்பு கதை

காட்டுமன்னார் கோவில் அருகில் உள்ள ஒரு சின்ன கிராமத்தில் சார்லி அவரின் மனைவி , அம்மா மற்றும் குழந்தைகளுடன் வாழ்ந்துவருகிறார். கோடை விடுமுறையின் காரணமாக பிள்ளைகள் வீட்டிலேயே இருக்கிறார்கள். அப்போது சார்லிக்கு கடன் கொடுத்த MS. பாஸ்கர், கொடுத்த பணத்தை கேட்டு மிரட்டுகிறார். அவரிடம் சார்லி வருகிற 1ம் தேதிக்குள் பணத்தை திருப்பி கொடுத்துவிடுவதாக சொல்கிறார்.

கடனை அடைக்க சார்லி அவரின் மனைவியுடன் வெளியூருக்கு 10 நாட்கள் வேளைக்கு செல்கிறார், அப்போது அவர்களின் சின்ன குழந்தை பிறந்தநாளுக்கு வாங்கி வைத்திருந்த தங்க மோதிரத்தை எடுத்து விளைடும்போது சக்தி ரித்விக் அந்த மோதிரத்தை தொலைத்துவிடுகிறார் அவரின் அப்பா வருவதற்குள் சக்தி ரித்விக் அந்த தங்க மோதிரத்தை தனது அக்கா பேபி மோனிகாவுடன் இணைத்து கண்டுபிடித்தாரா ? இல்லையா ? என்பதும் சார்லி , MS .பாஸ்கரின் கடனை அடைத்தாரா ? இல்லையா ? என்பதுதான் படத்தின் மீதி கதை…

இந்த கதையினை இயக்குனர் G,.சுரேஷ் இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

அனைவரின் நடிப்பு
குழந்தை சக்தி ரித்விக் & பேபி மோனிகாவின் நடிப்பு
அருண் ராஜ்- ன் பின்னணி இசை
ஒளிப்பதிவு

படத்தில் கடுப்பானவை

ஆவணப்படத்தை பார்த்த உணர்வு

Rating : ( 2.75/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *