கண்ணை நம்பாதே தமிழ் திரைப்பட விமர்சனம்

கண்ணை நம்பாதே கதை

கதையின் நாயகன் உதயநிதியும் கதையின் நாயகி ஆத்மிகாவும் காதலிக்கின்றனர், அப்போது நாயகன் உதய் நாயகியின் வீட்டில் வாடகைக்கு தங்குகிறார். பிறகு இவர்களின் காதல் ஆத்மீகாவின் அப்பாவிற்கு தெரிந்துவிட்டதால் நாயகனை வீட்டை விட்டு அனுப்பிவிடுகிறார், பிறகு உதய் ஒரு புரோக்கர் மூலமாக வீடு பார்க்கிறார்.

நாயகனுக்கு வீடும் கிடைக்கிறது , ஆனால் அங்கு அவருடன் பிரசன்னா சில நாட்கள் தங்கிவிட்டு சென்றுவிடுவார் பிறகு நீங்கள் மட்டும் தாங்கிக்கொள்ளலாம் என்கிறார் புரோக்கர், அதற்கு நாயகனும் ஒத்துக்கொள்கிறார்.

Read Also: Ghosty Tamil Movie Review

அப்படி ஒருநாள் இவர்கள் மதுக்கடையில் குடிக்க செல்கின்றனர் அப்போது அங்கு ஒரு விபத்து நடந்துவிடுகிறது, அந்த காரில் பூமிகா இருக்கிறார். அவரை அவரின் வீட்டில் விட்டுவிட்டு வந்துவிடுகிறார். மறுநாள் அந்த காரை பூமிகாவின் வீட்டில் விட செல்லும் போது அந்த காரில் பூமிகா இறந்து கிடக்கிறார். இவரின் இறப்பிற்கு யார் காரணம் என்பதை உதய் கண்டுபிடித்து இந்த பிரச்னையிலிருந்து தப்பித்தாரா ? இல்லையா ? என்பதுதான் படத்தின் மீதி கதை…

இந்த கதையினை இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தின் இயக்குனர் மு.மாறன் இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை
வேகமான முதல்பாதி
கதைக்கரு
கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு
பின்னணி இசை
ஒளிப்பதிவு
படத்தொகுப்பு

படத்தில் கடுப்பானவை
மேலும் மெழுகேற்றப்படாத கிளைமாக்ஸ்

Rating : ( 3.25/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *