மார்க் ஆண்டனி கதை
1975-ம் வருடம் டிசம்பர் 31-ம் தேதி சைன்டிஸ்ட் சிரஞ்சீவி தான் கண்டுபிடித்த ஒரு டைம் மிஷின் போனை பெரிய தொகைக்கு விற்க டீலிங் பேச செல்கிறார். அந்த போனை வைத்து நாம் இறந்த காலத்திற்கு பேச முடியும். அப்படி சைன்டிஸ்ட் சிரஞ்சீவி சென்ற இடத்தில் பேச்சுவார்த்தை ஒத்துவராததால் அவர் அங்கிருந்து கிளம்புகிறார். அப்படி செல்லும் வழியில் ஆண்டனிக்கும் , ஏகாம்பரத்திற்கும் நடந்துகொண்டிருக்கும் சண்டையில் இவருக்கு விபத்து ஏற்பட்டு இறந்துவிடுகிறார்.
Read Also: Parivarthanai Tamil Movie Review
30 வருடம் கழித்து கதையின் நாயகன் மார்க் ஒரு கார் மெக்கானிக்காக இருக்கிறார். இவருக்கு தன் அப்பா ஆண்டனி மேல் மிகுந்த கோபம் இருக்கிறது, அவர் மிக மோசமானவர்… அவரால் தான், தற்போது தான் இந்த நிலைமையில் இருக்கோம் என்று. எப்போதும் அவரை திட்டி கொண்டே இருப்பார், அப்படி ஒருநாள் மார்க்- கிற்கு அந்த டைம் ட்ராவல் போன் கிடைக்கிறது, அப்படி போன் கிடைத்த பிறகு மார்க் என்னவெல்லாம் செய்தார் என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அவரின் முந்தைய படங்களில் இருந்து சற்று மாறுபட்டு வித்யாசமாக இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு
➡SJ. சூர்யா & விஷால்-ன் சிறப்பான நடிப்பு
➡ஒளிப்பதிவு
➡சண்டைக்காட்சிகள்
➡பின்னணி இசை
➡படத்தொகுப்பு
படத்தில் கடுப்பானவை
➡கடுப்பாகும் அளவிற்கு எதுவும் இல்லை
Rating: ( 3.5/5 )